முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகம் பொலிவு பெற முகச்சுருக்கம் மாற முகம் பளபளக்க முகப்பரு தழும்பு மாற ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற

  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று.


உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும்.  உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும்.  நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது.  இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு,இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.  ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம்.  இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது.  முகப் பொலிவிற்கான  ரசாயன பூச்சுகள் பலன் தராது.

சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும்.  இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம்.  பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.

முகம் பொலிவு பெற

வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும்.  இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்

சந்தனத் தூள் - 5 கிராம்

வசம்பு பொடி - 2 கிராம்

எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் உறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி  கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.  வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.

முகச்சுருக்கம் மாற

ஆவாரம் பூ காய்ந்த பொடி    - 5 கிராம்

புதினா இலை காய்ந்த பொடி     - 5 கிராம்

கடலை மாவு     - 5 கிராம்

பயிற்ற மாவு - 5 கிராம்

எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு  குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும்.  தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.

வெள்ளரி - 2 துண்டு

நாட்டுத் தக்காளி - 1 பழம்

புதினா - சிறிதளவு

எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும் .  இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.

முகம் பளபளக்க

காலை வேளையில்,  கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும்.  இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

முகப்பரு தழும்பு மாற

புதினா சாறு - 2 ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்

இவற்றில் பயிற்ற மாவு கலந்து முகப்பரு  தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.

ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற

சாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி - 5 கிராம்

புதினா - 5 கிராம்

எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.

beauty tips tamil

beauty tips for face

beauty tips for hair

natural beauty tips for face

beauty tips in hindi

Beauty tips for face whitening in tamil

Beauty tips in tamil for oily skin


beauty tips in tamil for face black marks 
அழகு குறிப்புகள் தமிழ்

முகம் அழகு குறிப்புகள்

முடி அழகு குறிப்புகள்

முகத்தில் இயற்கை அழகு குறிப்புகள்

ஹிந்தியில் அழகு குறிப்புகள்

தமிழில் முகம் வெளுப்புக்கான அழகு குறிப்புகள்

எண்ணெய் தோலுக்கு அழகு குறிப்புகள்

முகம் கறுப்புக் குறிகளுக்கான தமிழ் அழகு குறிப்புகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

New born care part 1 புதிதாக பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது டாக்டர்...

Cure Autism ஆட்டிசம் ஏன் வருகிறது Medical advice Dr. Asha's clear explan...

    Dedicated to every autism mom all over world who sacrificed their life for kids♥️🥰❤️💕 UmaJai thank you 🙏 dear ♥️💕  What is autism #Autistic #meaning in tamil #Autism #symptoms #Autism in #tamil #Autism #meaning Autism spectrum disorder  What are the 3 main symptoms of autism?  What are the 3 main symptoms of autism? What is autism exactly? What is the main cause of autism? What is an autistic person like?  Abnormal Body Posturing or Facial Expressions Abnormal Tone of Voice Avoidance of Eye Contact or Poor Eye Contact Behavioral Disturbances Deficits in Language Comprehension Delay in Learning to Speak Flat or Monotonous Speech Inappropriate Social Interaction Intense Focus on One Topic Lack of Empathy Lack of Understanding Social Cues Learning Disability or Difficulty Not Engaging in Play With Peers Preoccupation With Specific Topics Problems With Two-Way Conversation Repeating Words or Phrases Repetitive Movements Self-Abusive Behaviors Sleep Disturbances Social Withdrawal Un

எளிய முறை அழகு குறிப்பு முகம் பொலிவு பெற pengal alaku kurippu, pengal azhaku, mooligai maruththuvam,

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும். * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும் .* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். * பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.  * பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.  * புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு ப