முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் எழுத்தின் வளர்ச்சி The development of Tamil writing



முன்னுரை :
பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழி எழுத்திலிருந்து தமிழ், வட்டெழுத்து என்னும் இரு வகை எழுத்துக்கள் தோன்றின. இவ்விரு எழுத்துக்களும் சில இடங்களில் ஒரே கல்வெட்டில் கலந்தும் காணப்படுகின்றன. தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காணமுடிகிறது. இருப்பினும் இவற்றின் எழுத்தமைதி காலத்தால் பிற்பட்டதாக உள்ளது. கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே செங்கல்பட்டு மாவட்ட வல்லத்தில் உள்ள கல்வெட்டுத்தான் எழுத்தமைதியில் காலத்தால் முற்பட்ட தமிழ் கல்வெட்டாகக் கருதப்படுகிறது.
பல்லவர் காலம் :
முற்காலப் பல்லவரின் செப்பேடுகள் தெலுங்கு, கிரந்தம், கன்னடம் ஆகிய மூவகை வடிவில் எழுதப்பட்டன. சிம்ம விஷ்ணுவின் பள்ளன்கோயில் செப்பேடுகள் கிரந்த எழுத்திலும் தமிழ் எழுத்திலும் அமைந்துள்ளது. மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு முழுவதும் தமிழில் அமைந்துள்ளது. முதல் நரசிம்மவர்மனின் திருக்கழுக்குன்றக் கல்வெட்டில் சில வட்டெழுத்துக்கள் கலந்துள்ளன. பிற்காலப் பல்லவர் செப்பேடுகள் கிரந்தத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ், கிரந்தம், நாகரம் ஆகிய 3 வடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கால நடுகற்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.பி. 743ஐச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் மேல்சாணர்குப்பத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டே தமிழில் கிடைத்த நடுகல் கல்வெட்டுக்களுள் காலத்தால் முந்தையதாகும்.
சோழர் காலம் :
முற்காலச் சோழரின் தமிழ் எழுத்துக்கள் பெரிதாகவும் அழகாகவும் உள்ளன. கவனத்துடன் எழுதப்பட்டதால் பிழைகள் குறைவாக உள்ளன. முதலாம் இராசராசன் கால எழுத்துக்கள் ஒப்பற்ற வனப்பு உடையன. பிற்காலச் சோழரின் எழுத்துக்களில் அழகும் அமைதியும் இல்லை. 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்துக்களின் அழகு குறையத்தொடங்கியது.
பாண்டியர் காலம் :
கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்களில் தமிழ் கிரந்தமும், செப்பேடுகளில் கிரந்தம், வட்டெழுத்தும் பயன்படுத்தப்பட்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்தின் பயன்பாடு சிறிது சிறிதாக குறையத்தொடங்கியது. தமிழ் எழுத்தின் ஆதிக்கம் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது.
விஜயநகர நாயக்கர் காலம் :
கி.பி. 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் எழுத்தோடு கிரந்த எழுத்தும் கலந்து கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எழுதப்பட்டன. தமிழின் தனித்தன்மை மங்கத்தொடங்கியது. இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்தோடு சமஸ்கிருத ஈடுபாடுடையவர்கள். சமஸ்கிருதமும், தமிழும் கலந்து எழுதும் மணிபிரவாள நடை "விஜய நகர காலக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றது". நாயக்கர்களும், விஜய நகர அரசையே பின்பற்றினர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!

Every town’s our home town; every man, our kinsman; good and evil happen not because of others; pain and relief happen on their own; dying isn’t something unknown; neither do we rejoice that life is a joy, nor in disgust, do we call it a misery; since we know from words of the wise ‘Our precious lives follow their destined course, like rafts following the course of a mighty river clattering over rocks after a downpour from lightning slashed skies’, we are not impressed by the mighty; more importantly, we do not scorn the lowly. யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண் துளி தலை இ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. This poem by Kanian Poonkundranar (A...

ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் Aala Poraan Tamizhan song lyrics

படம்: மெர்சல் வரிகள்: விவேக் குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வரிகள்:- கோரஸ்: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..   பாடல் :  ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான் இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி... வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் சரணம்: ஹே அன்பைக் ...

உலக தமிழ் சங்கம் World Tamil Association

தமிழ்ச்சங்கம்    என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன. சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.400 முதல் கி.பி.200 வரை இருந்துள்ளது. இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது   மதுரைத் தமிழ்ச் சங...