முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக வரலாறு History of Tamil Nadu




தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது.
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ2 அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த ஸ்ரீ விஜயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.
வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன்னாள் முதலமைச்சர் செல்வி:ஜெயலலிதா அவர்களின் கம்பீரமான பேச்சு X Chief ...

  X Chief Minister Ms. Jayalalithaa's majestic speech Jayalalithaa Jayaram Biography - About family, political life The Tamil Nadu Chief Minister, Ms J. Jayalalithaa Jayalalitha first movie Jayalalitha death date Tamil Nadu CM List Tamil Nadu chief minister List Jayalalitha husband name Jayalalitha mother Sandhya Jayalalitha age History of Jayalalithaa History of Jayalalithaa's mother Jayalalitha age 2020 History of MGR Jayalalithaa Jayalalitha first movie Biography of Jayalalithaa Jayalalithaa's story Jayalalithaa record ஜெயலலிதா வரலாறு ஜெயலலிதா அம்மா வரலாறு Jayalalitha age 2020 எம்ஜிஆர் ஜெயலலிதா வரலாறு Jayalalitha first movie ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஜெயலலிதா கதை ஜெயலலிதா சாதனை ஜெயலலிதா அம்மா வரலாறு

ஆட்டிசம் என்பது Medical advice Dr. Asha's clear explanation

Dedicated to every autism mom all over world who sacrificed their life for kids♥️🥰❤️💕 UmaJai thank you 🙏 dear ♥️💕 What is autism #Autistic​ #meaning​ in tamil #Autism​ #symptoms​ #Autism​ in #tamil​ #Autism​ #meaning​ Autism spectrum disorder What are the 3 main symptoms of autism? What are the 3 main symptoms of autism? What is autism exactly? What is the main cause of autism? What is an autistic person like? Abnormal Body Posturing or Facial Expressions Abnormal Tone of Voice Avoidance of Eye Contact or Poor Eye Contact Behavioral Disturbances Deficits in Language Comprehension Delay in Learning to Speak Flat or Monotonous Speech Inappropriate Social Interaction Intense Focus on One Topic Lack of Empathy Lack of Understanding Social Cues Learning Disability or Difficulty Not Engaging in Play With Peers Preoccupation With Specific Topics Problems With Two-Way Conversation Repeating Words or Phrases Repetitive Movements Self-Abusive Behaviors Sleep Disturbances S...

Type 1&2 கோவக்காய் சர்க்கரை நோயை குணமாக்கும் Medical advice Dr. Asha's ...