முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகத்தில் உள்ள பருக்கள் மறைய எளிமையான வீட்டு வைத்தியம்,Simple home remedies for pimples on the face




சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். 
அத்தகையவர்களைப் பார்த்தால், பொறாமை ஏற்படுவதோடு, மனதில் இருக்கும் தன்னம்பிக்கை குறையும். ஏனெனில் இவ்வுலகில் அகம் அழகாக இருப்பதை பலர் பார்ப்பதில்லை. பெரும்பாலானோர் புற அழகை வைத்து தான் ஒருவரை எடை போடுகிறார்கள். ஆகவே அக அழகுடன், புற அழகையும் மனதில் கொண்டு புற அழகை சரியாக பராமரித்து வந்தால், எதையும் தைரியமாக மேற்கொள்வதோடு, வாழ்க்கையில் முன்னேற முடியும். எப்படியெனில், இந்த உலகத்தில் பலர் அழகு குறைவாக உள்ளது என்று நினைத்து தம்மை தாமே குறைவாக எடை போடுகிறார்கள். இதனால் தன்னம்பிக்கை குறைந்து, முன்னேற்றமானது தடைப்படுகிறது. ஆகவே அழகாக இருக்க வேண்டுமெனில், சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்தாலே போதும். மேலும் நல்ல உணவுகளை சாப்பிடுவதும் சரும அழகை மேம்படுத்தும். இப்போது சருமத்தை நன்கு அழகாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய சில செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முறையாக பின்பற்றி வந்தால், அழகாக மாறுவது உறுதி.



தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.

தினமும் குறைந்தது 2 பெரிய டம்ளர் அளவில் பழங்களால் ஆன ஜூஸை குடிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய அனைத்து 
சத்துக்களும் கிடைத்து, சருமம் அழகாக வெளிப்படும். முக்கியமாக கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்

தினமும் சரியாக தூங்குவதில்லையா? அப்படியெனில் அது முக அழகை கெடுக்கும். எனவே தவறாமல் தினமும் 8 மணிநேரம் நன்கு தூங்கி எழுந்தால், சருமம் அழகாக இருக்கும்.


எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். எனவே சாலட் சாப்பிடும் போது சிறிது எலுமிச்சை சாறு அல்லது 1 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.

வால்நட்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை அன்றாட உணவில் சேர்த்து வர, சருமம் அழகாகும். மேலும் வால்நட் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், முதுமை தள்ளிப் போகும்.

சரும அழகை கூட்டுவதற்கு ஒரு சிறந்த வழி என்றால் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவது தான். இல்லையெனில், ஆரஞ்சு பழ தோலை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போடலாம்.

வாழைப்பழத்தை நன்கு மசித்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், பொலிவான சருமம் கிடைக்கும். மேலும் க்ரீன் டீ போட்ட பின்னர், அந்த இலையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகும்.


இந்த அழகான பழத்தை உணவில் சேர்த்தால், அது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும்.

மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சால்மன் மீனை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து, முகத்தின் அழகு கூடும்.


முட்டையில் புரோட்டீன் மட்டும் நிறைந்திருப்பதில்லை. அதில் சருமத்திற்கு அழகைக் கொடுக்கும் சில வைட்டமின்களும் நிறைந்துள்ளன. எனவே முட்டையை உணவில் அதிகம் சேர்ப்பதோடு, முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளையில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு அரைத்து தடவினாலோ, பாதிப்படைந்த சரும செல்கள் குணமாகி, சருமத்தின் அழகு அதிகரிக்கும்.

பயறுகளில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், பாதிப்படைந்த சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, முதுமை தோற்றம் தடைபடும். ஆகவே அழகாக இருக்க வேண்டுமெனில், அதிகப்படியான பயறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அவகேடோவில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன், பொலிவாக காணப்படும்.



சர்க்கரை அல்லது உப்பு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.


தினமும் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி, 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், சருமம் வறட்சியின்றி அழகாக காணப்படும்.


நல்ல பழங்கள் மற்றும் காய்கறிகளான ஃபேஷியலை மாதத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.


எப்போதும் வெளியே செல்லும் போது, நல்ல தரமான சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்த வேண்டும். இதனால் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கலாம்.


சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. அவை கண்களைச் சுற்ற கருவளையங்களை ஏற்படுத்திவிடும். மேலும் சரும சுருக்கங்களையும் உண்டாக்கிவிடும். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது மறக்காமல், சன் க்ளாஸ் அணிந்து செல்வது நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!

Every town’s our home town; every man, our kinsman; good and evil happen not because of others; pain and relief happen on their own; dying isn’t something unknown; neither do we rejoice that life is a joy, nor in disgust, do we call it a misery; since we know from words of the wise ‘Our precious lives follow their destined course, like rafts following the course of a mighty river clattering over rocks after a downpour from lightning slashed skies’, we are not impressed by the mighty; more importantly, we do not scorn the lowly. யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண் துளி தலை இ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. This poem by Kanian Poonkundranar (A...

ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் Aala Poraan Tamizhan song lyrics

படம்: மெர்சல் வரிகள்: விவேக் குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வரிகள்:- கோரஸ்: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..   பாடல் :  ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான் இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி... வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் சரணம்: ஹே அன்பைக் ...

உலக தமிழ் சங்கம் World Tamil Association

தமிழ்ச்சங்கம்    என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன. சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.400 முதல் கி.பி.200 வரை இருந்துள்ளது. இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது   மதுரைத் தமிழ்ச் சங...